திருப்பத்தூர் மாவட்டம் ஆலாங்குப்பம் பகுதியில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தப்படவிருந்த ஒரு டன் ரேஷன் அரிசியையும், ஒரு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். வாகன சோதனையின்போது, வேகமாக வந்த காரை போலீசார் நிறுத்தியபோது, அதன் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து காரில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.