சட்டமன்ற கதவுகளை மூடினால், முதலமைச்சர் விஜயின் எலும்பை உடைப்பேன் என்று கூறி பகிரங்கமாக மிரட்டல் விடுத்த விளாத்திகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். கோவில்பட்டியில் கடந்த 18 ஆம் தேதி நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய மார்க்கண்டேயன், முதலமைச்சரை ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்தார். த.வெ.க.வினர் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்வதற்காக போலீசார் தி.மு.க. எம்.எல்.ஏ.மார்க்கண்டேயனின் வீட்டிற்கு சென்றனர். அப்போது, சபாநாயகரின் அனுமதி இல்லாமல் ஒரு எம்.எல்.ஏ.வை கைது செய்ய முடியாது என்ற எம்.எல்.ஏ.க்களுக்கான சட்டப்பிரிவைக்கூறி மார்க்கண்டேன் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். ஆனால் அதை எல்லாம் பொருட்படுத்தால் போலீசார் மார்க்கண்டேயனை கைது செய்த நிலையில், தி.மு.க.வினர் காவல்துறை ஜீப் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க. எம்.எல்.ஏ.மார்க்கண்டேயன் மீது கடுமையான கொலை மிரட்டல் விடுத்தல், அவதூறாக பேசுதல், பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார்,அவரை எஸ்.பி. அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். கைதான மார்க்கண்டேயனை சந்திக்க தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி தி.மு.க. வழக்கறிஞர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.