தமிழகத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக உணவுத் துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார். கடலூர் மாவட்டம் சிதம்பரம் கொத்தங்குடி தோப்புப் பகுதியில் உள்ள அரிசி ஆலை மற்றும் அமுதம் அங்காடியில் ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில் சில இடங்களில் கடந்த கால ஆட்சியில் இருந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் அதனால் யாரு ஆட்சிக்கு வந்தாலும் நாங்கள் செய்வதை தான் செய்வோம் ஒரு எண்ணங்களில் செய்கிறார்கள், அந்த இடங்களிலும் மாவட்ட நிர்வாகத்துடன் கலந்து ஆலோசனை செய்து அது போன்ற தவறுகள் எங்கு எங்கு நடைபெற்று வருகிறதோ அதனை கண்டுபிடித்து லைசென்ஸை கேன்சல் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றோம்.
Back to Top News
Top
July 19, 2026 at 12:51 PM
அரசு நேரடி கொள்முதல் நிலைய ஊழியர்களில் சிலர் தவறு செய்கின்றனர் - அமைச்சர் வெங்கடரமணன்
Polimer News