சென்னை பள்ளிக்கரணை அருகே மேடவாக்கம் - வேளச்சேரி பிரதான சாலையில் அன்றாடம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பயணிகள் துயரம் அடைவது தொடர்கதையாகி வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஆங்காங்கே குண்டும் குழியுமாக இருப்பது, வணிகர்கள் தங்கள் கடை விளம்பர பலகைகளை பாதி சாலைகள் வரை வைத்திருப்பது, எதிர் திசையில் வாகனங்களை இயக்குவது, மழை நீர் வடிகால் பணிகள் போன்ற காரணங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.