காஞ்சிபுரம் பட்டு, மதுரை சுங்குடி, திண்டுக்கல் பூட்டு உள்ளிட்ட 74 பாரம்பரிய பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கியதன் மூலம் தமிழகத்தின் பொருட்கள் சர்வதேச சந்தையை சென்றடைந்துள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். கோவையில் தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், தமிழ்நாடு பாதுகாப்புத் தொழில் வழித்தடத்தின் மூலம் கோவை, ஓசூர், திருச்சி, சென்னை உள்ளிட்ட தொழில் நகரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பாதுகாப்புத் துறை உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்கு மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Back to Top News
Top
August 8, 2026 at 12:28 PM
காஞ்சிபுரம் பட்டு உட்பட 74 பொருட்களுக்கு புவிசார் குறியீடு..!
Polimer News