ஈரானின் எண்ணெய் வருவாயையும், வெளிநாட்டு வர்த்தகத்தையும் முழுமையாக முடக்கி, அந்நாட்டின் மீதான பொருளாதார அழுத்தத்தை உச்சத்திற்குக் கொண்டு செல்ல டிரம்ப் நிர்வாகம் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஈரானிய கச்சா எண்ணெயைப் பெருமளவில் வாங்கும் சீனாவின் சிறிய தனியார் சுத்திகரிப்பு ஆலைகள், ஈரானின் எண்ணெய் வர்த்தகம் மற்றும் ஆயுதக் கொள்முதலுக்கு உதவும் சில சீன வங்கிகள் ஆகியவற்றின் மீது மறைமுகத் தடைகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஈரானைச் சுற்றியுள்ள ((ஈராக், துருக்கி, பாகிஸ்தான் போன்ற அண்டை)) நாடுகளின் உதவியுடன், ஈரான் எல்லைகள் வழியாக நடக்கும் இறக்குமதிகளைத் தடுக்கும் நிலப்பரப்பு முற்றுகை குறித்தும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆலோசித்து வருகின்றன.