பாகிஸ்தானின் பிராட் பீக் மலையில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் புகழ்பெற்ற நேபாள மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா உட்பட 10 பேர் மாயமாகியுள்ளனர். முகாம் 2 மற்றும் முகாம் 3 இடையே மலையேற்றக் குழுவினர் உச்சியை நோக்கிச் சென்றபோது வியாழக்கிழமை நண்பகலில் இந்த பனிச்சரிவு ஏற்பட்டது. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகளைத் தொடங்குவதில் பெரும் தாமதம் நிலவி வருகிறது. அனைவருடனான தொடர்பும் துண்டிக்கப்பட்ட போதிலும், நிர்மல் புர்ஜாவின் ஜி.பி.எஸ் கருவி நகர்வதைக் காட்டுவது மீட்புக் குழுவினருக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. சம்பவ இடத்திலிருந்து நான்கு உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில், அவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
Back to Top News
Top
July 31, 2026 at 11:45 AM
பாகிஸ்தானில் பனிச்சரிவு: பிரபல மலையேற்ற வீரர் நிர்மல் புர்ஜா உட்பட 10 பேர் மாயம்..!
Polimer News